அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் : புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தல்!!

254


அனைத்து அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யபடல் வேண்டும் என்றும் அடிப்படையில் அரசியல் கைதிகள் சிறைச்சாலையில் முன்னெடுக்கும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு பேரணிக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தன்னுடைய முழு ஆதரவினை தெரிவிப்பதோடு அவ் கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என அமைப்பின் வன்னி மாவட்டச் செயலாளர் என்.பிரதீபன் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.



மேலும் தேசிய இனப்பிரச்சினை மூலம் உருவான அரசியல் கைதிகளின் பிரச்சினை என்பது தொடர்ச்சியாக நீண்டு கொண்டிருக்கின்றது. இன்றைய நிலையில் இப்பிரச்சினையானது சட்டப் பிரச்சினையாக கருதாமல் அரசியல் பிரச்சினையாக கருதி தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் இப்பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைக்கக் கூடிய வழிகளை கண்டறிந்து அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் உதவ வேண்டுமென எமது அமைப்பு கோரிக்கை விடுவதோடு இம்மாதம் 22ம் திகதி சனிக்கிழமை 10 மணிக்கு வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் சார்பில் முன்னெடுக்கப்படவுள்ள பேரணியிலும் கவனயீர்ப்பிலும் இக்கோரிக்கைக்கு ஆதரவான அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள் உழைக்கும் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு எமது அமைப்பு அழைப்பு விடுக்கின்றது.

தொடர்புகளுக்கு : 077 3755626
தோழமையுடன்
என்.பிரதீபன்