ஏற்கனவே திருமணமான நபரை மணந்த கல்லூரி மாணவி : நேர்ந்த விபரீத சம்பவம்!!

479

இந்தியாவின் தெலுங்கானாவில் ஏற்கனவே திருமணமான நபரை மாணவி மணந்த நிலையில் இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீலட்சுமி. கல்லூரி மாணவியான இவர் தினமும் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுனர் திருமால் ராவுடன் ஸ்ரீலட்சுமிக்கு நட்பு ஏற்பட்ட நிலையில் காதலாக மாறியுள்ளது.

திருமாலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்தும் ஸ்ரீலட்சுமி அவரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்து தங்கள் குடும்பத்தாரிடம் இது குறித்து கூற அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ஸ்ரீலட்சுமியும், திருமாலும் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டனர். ஆனாலும் திருமணம் செய்வதில் உறுதியாக இருந்ததால் இரு குடும்பத்தாரும் அவர்களை வீட்டை விட்டு துரத்தினார்கள்.

பின்னர் ஸ்ரீலட்சுமியும், திருமாலும் கோவிலில் திருமணம் செய்த நிலையில் தங்களின் உறவினர்களை அங்கு அழைத்தனர். ஆனால் உறவினர்கள் திருமணத்தை எதிர்த்ததால் அங்கு வரவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீலட்சுமியும், திருமாலும் விஷம் குடித்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.