அப்பா எப்போது வருவார் : வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : நெகிழ்ச்சி சம்பவம்!!

521

அப்பா எப்பம்மா வருவாரு? வெளிநாட்டில் தந்தை இறந்தது தெரியாமல் எதிர்பார்ப்பில் மகன் : மனம் உருகும் பின்னணி!!

சவுதி அரேபியாவில் இந்தியர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சடலத்தை பெறமுடியாமல் இந்தியாவில் உள்ள குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் இர்பான் (27). இவருக்கு நர்கீஸ் (25) என்ற மனைவியும் சோகில் (5) என்ற மகனும் உள்ளான்.

குடும்ப வறுமை காரணமாக இர்பான் இரு மாதங்களுக்கு முன்னால் சவுதியின் Dammam நகரில் கார் ஓட்டுனர் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11-ஆம் திகதி மின்சாரம் தாக்கி இர்பான் உயிரிழந்துள்ளார். அவர் இறந்து பத்து நாட்கள் ஆகியும் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வரமுடியாமல் குடும்பத்தார் தவித்து வருகிறார்கள்.

இது குறித்து நர்கீஸ் கூறுகையில், தன்னுடைய அப்பா இறந்துவிட்டதை சோகிலால் உணரமுடியவில்லை. அவர் எப்போது வருவார் என எதிர்பார்த்து கொண்டிருக்கிறான்.

இர்பான் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர ஒன்றரை லட்சம் பணம் கேட்கிறார்கள், ஆனால் எங்களிடம் பணம் இல்லை.
எங்கள் எம்.எல்.ஏ, சவுதியில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் உதவியை நாடியும் எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து எம்.எல்.ஏ தாகூர் திரேந்திரா கூறுகையில், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் இது குறித்து பேசி வருகிறேன்.
இது இயற்கைக்கு மாறான மரணம் என்பதால் பொலிசார் விசாரணை நடக்கிறது.

வெளிநாட்டு வழிமுறைகள் காரணமாக இர்பான் சடலத்தை கொண்டுவருவதில் சிக்கல் உள்ளது என கூறியுள்ளார்.