தந்தையும் மகளும் பரிதாபமாக பலி!!

252

மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்ற தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மினுவாங்கொட பிரதேசத்தில் இருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று கிரித்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்த போது குறித்த இருவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

45 வயதுடைய தந்தையும் 14 வயதுடைய மகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.