கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக ஒரு தொகைப் பூக்கன்றுகளைக் கொண்டுவந்த மூன்று நபர்கள் சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பெண்கள் உட்பட மூவர் அடங்குவதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் ஜா-எல, களனி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார்.
தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட அந்தூரியன், ஓர்க்கிட் உட்பட பல பூக்கன்றுகளை அவர்கள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் பெறுமதி சுமார் 5 லட்சம் ருபாய் என சுங்கத் திணைக்களப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பூக்கன்றுகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அனுமதியைப் பெற்றுக்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகிறது.