தீக்குளித்து தற்கொலை செய்த இளைஞர் வெளியிட்ட வீடியோ : மனைவி குடும்பத்தாரே காரணம் என கண்ணீர்!!

323


இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்த நபர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி மாமனார், மாமியார் தான் அதற்கு காரணம் என வீடியோவில் கூறியுள்ளார்.



ஸ்ரீகாந்த் (25) என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த ஸ்ரீகாந்த் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்னர் 37 நிமிட வீடியோவை அவர் பதிவு செய்திருந்தார்.

அதில், நானும் என் மனைவி ஸ்ரீஹர்ஷாவும் கலப்பு திருமணம் செய்த நிலையில் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது. ஸ்ரீஹர்ஷாவும் அவரது பெற்றோரும் என்னை துன்புறுத்தினார்கள், என் தற்கொலைக்கு அவர்களே காரணம்.



என் மனைவியை வேண்டுமென்றே என்னிடம் இருந்து பிரித்த அவர் குடுமபத்தார், கருக்கலைப்பு செய்யவும் வற்புறுத்தினார்கள் என கூறியுள்ளார்.



இது குறித்து பொலிசார் கூறுகையில், ஸ்ரீகாந்தை ஸ்ரீஹர்ஷா பிரிந்தபின்னர் பொலிசில் ஒரு புகார் கொடுத்தார்.


அதாவது தனது அந்தரங்க புகைப்படத்தை ஸ்ரீகாந்த் இணையத்தில் வெளியிட்டதாக புகார் அளித்தார்.

இது மற்றும் ஆறு வழக்குகள் ஸ்ரீகாந்த் மீது நிலுவையில் இருந்தன, சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.