இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சொகுசு ரயில் சேவை!!

282

இலங்கையில் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய சொகுசு ரயில் சேவை நேற்று ஆரம்பமாகி உள்ளது.

இந்த ரயில் சேவை நாளாந்தம் காலை 8.30 மணியளவில் கல்கிஸ்சையில் இருந்து ஆரம்பிக்கும். அன்றையதினம் மாலை 4.10 மணியளவில் ரம்புக்கனையில் இருந்து மீண்டும் கல்கிஸ்சை நோக்கி பயணிக்கும்.

இந்த ரயில் சேவையின் போது ஒரே நேரத்தில் 100 பேர் பயணிக்க முடியும்.

கோட்டை மற்றும் வேயங்கொட ரயில் நிலையத்தில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும் என கூறப்படுகின்றது.

சுற்றுலா பயணிகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.