காந்தி லலித்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சின்னத்திரை நடிகை நிலானி திடீரென தலைமறைவாகியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சின்னத்திரையின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை நிலானி தன்னுடைய கணவரை பிரிந்த பின்னர், மகன் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையில் உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் மீது நிலானிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் லலித் குமார் பற்றிய உண்மை தகவல்கள் தெரியவந்ததால், நிலானி அவரை விட்டு ஒதுங்கியுள்ளார்.
தொடர்ச்சியாக நிலானியை தொந்தரவு செய்த லலித், தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு நிலானி மறுப்பு தெரிவித்ததால், விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், லலித்துடன் நடிகை நிலானி இருக்கும் ரகசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்தது.
இதனால் மனமுடைந்த நிலானி திடீரென கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அரைமயக்கத்திலே அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நிலானி தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய நிலானி திடீரென தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடைய சொந்த வீட்டிற்கு செல்லாமல், குழந்தைகளையும் எங்கோ மறைத்து வைத்துள்ளார். அவருடைய தொலைபேசிக்கு முயற்சி செய்தபோது கூட ஆப் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.