பெற்ற குழந்தையை கொலை செய்த தாய் : அடுத்து செய்த அதிர்ச்சி செயல்… வெளியான பின்னணி!!

381


இந்தியாவின் தெலுங்கானாவில் பெற்ற குழந்தையுடன் சேர்ந்து தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கரீம்நகரை சேர்ந்தவர் புர்லா கணேஷ். இவர் மனைவி ரம்யா. தம்பதிக்கு மனுஸ்ரீ (4) என்ற மகள் உள்ளார். திருமணத்தின் போது கணேஷுக்கு ரம்யா பெற்றோர் மூன்றரை லட்சம் வரதட்சணை கொடுத்தனர்.

அப்போது நல்ல வேலையில் இருந்த கணேஷ் மனுஸ்ரீ பிறந்தவுடன் வேலையை விட்டு வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து தனக்கு மேலும் வரதட்சணை வேண்டும் என தனது பெற்றோருடன் சேர்ந்து ரம்யாவை கணேஷ் கொடுமைப்படுத்தியுள்ளார்.



இது குறித்து ரம்யா தனது பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் ஒரு லட்ச ரூபாய் கொடுத்ததோடு சூப்பர் மார்க்கெட் வைத்து கொள்ள ஐடியாவும் கொடுத்து அதற்கான பொருட்களையும் கணேஷுக்கு வாங்கி கொடுத்தனர்.



இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவு கணேஷுக்கும், ரம்யாவுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.


இதையடுத்து மனமுடைந்த ரம்யா தனது குழந்தை மனுஸ்ரீயை கிணற்றில் தூக்கிவீசி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இருவரின் சடலத்தையும் கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.