உணவு சுவையாக இல்லாததால் மனைவி எடுத்த விபரீத முடிவு : அனாதையான குழந்தைகள்!!

670

பெங்களூரில் உணவு சுவையாக இல்லை என கணவன் திட்டியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஜெயலட்சுமியை (41) திருமணம் செய்துகொண்ட பின்னர் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.

அங்கு சொந்தமாக சலூன் கடை வைத்து நடத்தி வந்த நாகராஜ் தினமும், உணவு சுவையாக இல்லை என மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று மதிய உணவிற்கு வீடு வந்த நாகராஜ், சுவையாக இல்லை என ஜெயலட்சுமியை திட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த ஜெயலட்சுமி, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வீட்டில் இருந்து அலறல் சத்தம் வருவதை கேட்ட அவருடைய மகள்கள் இருவரும் உள்ளே சென்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் ஜெயலட்சுமியின் பெற்றோர் நாகராஜ் மீது பொலிஸ் நிலையில் புகார் அளித்தனர். அந்த புகாரில் எங்களுடைய மகளுக்கு சரியாக சமைக்க தெரியாது. குழந்தை பிறந்த பின்னர், கணவரையும் குழந்தைகளையும் சமாளிக்க தெரியாமல் திகைத்துள்ளார். இதனால் அடிக்கடி நாகராஜ் எங்களுடைய மகளை கொடுமை படுத்தி வந்தார். தற்போது நடந்த தற்கொலை சம்பவத்திற்கு கூட நாகராஜ் தான் காரணம் என குறிப்பிட்டிருந்தனர்.

இதுசம்மந்தமாக தற்போது பொலிஸார் நாகராஜை கைது செய்துள்ளனர்.