வவுனியாவில் தேசிய சாதனையாளர்கள் கௌரவிப்பு!!

578

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 30வது தேசிய விளையாட்டுப் போட்டியில் வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயத்தின் தடகள வீராங்கனை செல்வி எஸ்.ஹேமப்பிரியா (1ம் இடம் – 21km அரை மரதன்), வூசோ வீராங்கனை செல்வி எம்.கிருபாலினி (2ம் இடம்- வூசோ) , மாவட்ட தடகள வீரர் செல்வன் எம்.கௌரிநாதன் (6ம் இடம்- மரதன்) ஆகிய வீரர்களுக்கான கௌரவிப்பும் தடகள பயிற்றுவிப்பாளரான நவநீதன், வூசோ பயிற்றுவிப்பாளர் நந்தகுமார் ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் இன்று (26.09.2018) இடம்பெற்றது

இளைஞர் சேவைகள் மன்றத்தின் வாயிலில் ஆரம்பித்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தில் வலயத்தின் பணிப்பாளர் தலைமையில் கௌரவிப்பு நடைபெற்று இறுதியாக வித்தியாலய முதல்வர் தலைமையில் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் வித்தியாலயத்தில் நடைபெற்றது.