வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச சிறுவர்தினம்!!

341


 

சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் வவுனியா அல்- இக்பால் மகாவித்தியாலத்தில் பாடசாலை அதிபர் அ.அப்துல் நஸார் தலைமையில் சிறப்பாக இன்று இடம்பெற்றது.



தைரியமாக முன்னோக்கிச் செல்வதற்காக எமது சிறுவர்களைப் பலப்படுத்துவோம் என்னும் கல்வி அமைச்சின் கொள்கைக்கு ஏற்ப பல்வேறு நிகழ்வுகள் பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் இடம்பெற்றது.

சுற்று சூழல் தொடர்பில் மாணவர்களை விழிப்புணர்வூட்டும் வகையில் மரநடுகை இடம்பெற்றதுடன், மாணவர்களின் திறமைளை வெளிப்படுத்தும் வகையிலும் மாணவர்களின் தோழமை பண்மை வளர்க்கும் வகையில் பாராம்பரிய விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மணவர்களுக்காக மதிய உணவும் வழங்கப்பட்டது.



பாடசாலை மாணவர்கள் சிறுவர் தினத்தில் தமது திறன்களை வெளிப்படுத்தி சிறப்பாக செயற்பட்டிருந்தனர். இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.