வவுனியாவில் தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சிறுவர் தின நிகழ்வும்!!

541


வவுனியா நகரசபையின் பொது நூலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வாசிப்பு மாத ஆரம்ப நிகழ்வும் சர்வதேச சிறுவர்கள் தினமும் இன்று(01.10) முற்பகல் 11 மணியளவில் நகரசபையின் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் பொது நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன் தலைமையில் இடம்பெற்றது.

கதை சொல்லும் நேரம் முன்பள்ளி மாணவர்களினால் இடம்பெற்றது. சர்வதேச வாசிப்பு தினம் சர்வதேச சிறுவர் தினம் தொடர்பாக நகரசபை செயலாளர் உரையாற்றினார். இறுதியில் கலந்துகொண்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், நகரசபை கணக்காளர் நித்தியகுமார், நிர்வாக உத்தியோகத்தர் நிஷங்க, சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் வத்சலா கிருபானந்த சர்மா மற்றும் நகரசபை உத்தியோகத்தர்கள், முன்பள்ளி மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.