வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரைக் காப்பற்ற உதவுமாறு கோரிக்கை!!

853

வவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு மனைவி செல்வகுமார் அகில்ராணி தெரிவித்துள்ளார்.

வவுனியா, கோவில்குளம் பகுதியை சேர்ந்த ஐயாத்துரை செல்வகுமார் (வயது 41) என்பவர் குருதி உயர் அழுத்தம் ஏற்பட்டு தலை நரம்பு வெடித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டுமாயின் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சத்திர சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு 25 இலட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. அவ்வாறான பணத்தை வழங்கக்கூடிய நிலையில் அந்தக் குடும்பம் இல்லை.

எனவே மூன்று பிள்ளைகளின் தந்தையின் உயிரை காப்பாற்ற கருணை உள்ளம் கொண்டவர்களின் உதவியை அவரது மனைவி எதிர்பார்த்துள்ளார்.

உதவி செய்பவர்கள் இலங்கை வங்கியின் செல்வகுமார் அகில்ராணி என்னும் பெயரில் உள்ள 81683649 என்னும் கணக்கிலக்கத்திற்கு பணத்தை செலுத்துமாறு மனைவி கோரியுள்ளார்.

தொலைபேசி இலக்கம்: 0762275971