தமிழகத்தில் இரண்டு பேரை திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம் பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சமிதா (18). இவருக்கும் சாலை நகர் பகுதியை சேர்ந்த உறவினரான சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது குரூப் போட்டோ எடுப்பது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டிற்கும், பெண் வீட்டிற்கும் தகராறு வந்ததுள்ளது. பின்னர் சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை காரணம் காட்டி திருமணம் ஆன சில தினங்களிலேயே சமிதா கோபித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வர சக்திவேல், மாமனார் வீட்டிற்கு சென்ற நிலையில் அவருடன் செல்ல சமிதா மறுத்துள்ளார். இந்நிலையில் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டி சக்திவேல் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.
அப்போது மனைவி சமிதா வேறொரு இளைஞருடன் கழுத்தில் புதிதாக கட்டப்பட்ட மஞ்சள் தாலியுடன் ஜோடியாக கிரிவலம் செல்வதை கண்டு திகைப்படைந்தார்.
அப்போது தான் சமிதாவுடன் கிரிவலம் வந்தவர் அவரின் பள்ளிபருவ காதலன் கார்த்திக் என்பதும் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து சக்திவேல், தனது மனைவி தன்னை விவாகரத்து செய்து கொள்ளாமல் வேறொரு இளைஞரை 2 வது திருமணம் செய்து கொண்டதாக பொலிஸ் புகார் அளித்தார்.
பொலிசார் விசாரணையில், சமிதா, 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கார்த்திக்கை காதலித்த நிலையில் கர்ப்பமாகியுள்ளார்.
கார்த்திக் தங்களை விட குறைந்த ஜாதி என்பதால் சமிதாவின் கர்ப்பத்தை கலைத்த குடும்பத்தினர் சமிதாவை உறவினர் சக்திவேல் வீட்டில் தங்க வைத்தனர்.
அங்கு 2 மாதம் தங்கி இருந்த நிலையில் சக்திவேலுவுக்கும், சமிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளது தெரியவந்தது.
கணவன் வீட்டாரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்ற சமிதா பழைய காதலன் கார்த்திக்கை சந்தித்து பேசி அவரை திருமணம் செய்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பொலிசார் சமிதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்