கொழும்பில் பற்றி எரியும் விற்பனை நிலையம் : களத்தில் விமானப் படை!!

459


கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லையில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், இலங்கை விமானபடையின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.



தீயை கட்டுப்படுத்தும் நோக்கில் Bell 212 என்ற ஹெலிகொப்டர் ஒன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. வானில் இருந்து நீர் பிரயோகம் மேற்கொண்டு தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு தீயணைப்பு பிரிவின் 7 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



மேலும் இராணுவத்தினரின் உதவியும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



இதேவேளை நிலையத்திற்கு பெருமளவு வாடிக்கையாளர்களும் மற்றும் ஊழியர்களும் இருந்துள்ளனர்.


தீ வேகமாக பரவி வரும் நிலையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.