வவுனியா விபுலானந்த கல்லூரியில் குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திரத் தொகுதி திறந்து வைப்பு!!

314

வவுனியா விபுலானந்த கல்லூரியில் கல்வி கற்கும் 2200 பாடசாலை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா அவர்களின் 2018ம் ஆண்டுக்கான குறித்தொகுக்கப்பட்ட நிதியிலிருந்தும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிதியிலும் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திர தொகுதி இன்று (12.10.2018) காலை 7.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் பொன்னையா சிவநாதன் தலமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா கலந்து கொண்டு குடிநீர் சுத்தரிகரிப்பு இயந்திர தொகுதியினை திறந்து வைத்தார்.

வடமாகாணசபை உறுப்பினனர் இந்திரராஜாவின் 2018ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 150,000 ரூபாவும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் நிதியிலிருந்து ரூபா 50,0000 நிதியும் இத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டுள்ளது.