தனி ஒரு ஆளாக நின்று திருமணத்தையே நிறுத்திய சிறுமி : ஆச்சர்ய சம்பவம்!!

290


மதுரையில் தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை தனி ஒரு ஆளாக 17 வயது சிறுமி தடுத்தி நிறுத்தியுள்ள சம்பவம் நடந்துள்ளது.மதுரை வடகரை பகுதியை சேர்ந்த 17 வாய்த்து சிறுமி தெப்பக்குளத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.



இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் வருகின்ற 21-ம் தேதி திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத சிறுமி, தான் தொடர்ந்து படிக்க வேண்டும் எனவும் தற்போது திருமணம் வேண்டாம் எனவும் வீட்டில் கூறியுள்ளார். ஆனால் வருடைய வார்த்தைக்கு செவிமடுக்காத உறவினர்கள் தொடர்ந்து திருமணத்திற்கான வேலைகளை கவனித்து வந்துள்ளனர்.



இதனால் ஆத்திரமடைந்த சிறுமி நேற்றைய தினம் மதிச்சியம் காவல் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார். உடனே இந்த தகவல் சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் குழந்தைகள் நல வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.



இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், திருமணம் குறித்து விசாரித்த போது அதற்கான வேலைகள் நடந்து வருவதை உறுதி செய்தனர்.


மேலும் சிறுமிக்கு தற்போது திருமனம் நடந்தால் உறவினர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என எச்சரித்துள்ளனர். இதனையடுத்து திருமணத்தை நிறுத்துவதாக ஒப்புக்கொண்ட உறவினர்கள், சிறுமிக்கு திருமண வயது பூர்த்தியடைந்தவுடனே திருமணம் செய்யப்படும் என எழுதி கொடுத்தனர்.

அதன் பின்னர், தனி ஒரு ஆளாக பொலிஸ் நிலையம் வரை சென்று திருமணத்தை நிறுத்திய சிறுமியையும் பாராட்டி சென்றனர்.