நள்ளிரவில் உடல் முழுதும் ரத்தத்துடன் ஓடிவந்த தாய் : அதிர்ச்சியடைந்த மகன்கள்!!

370


சென்னை பள்ளிக்கரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.



சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தாகிவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

மதுபோதைக்கு அடிமையாகியிருந்த கிருஷ்ணமூர்த்தி தினமும் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி மகாலட்சுமியிடம் சண்டையிட்டுள்ளார். இதனை ஏற்காத மகாலட்சுமி தொடர்ந்து வேலைக்கு சென்றுள்ளார்.





இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி நேற்றும் வழக்கம் போல மது அருந்திவிட்டு வீட்டில் சண்டையிட்டுள்ளார். மகாலட்சுமியும் அவரை திட்டிவிட்டு உறங்க சென்றுவிட்டார்.


ஆனால் ஆத்திரம் குறையாமல் இருந்த கிருஷ்ணமூர்த்தி நள்ளிரவில் மகாலட்சுமியை சாராமரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்தம் வெளியேறியபடி உதவி கேட்டு மகாலட்சுமி ஓடிவந்துள்ளார். தாயின் அலறல் சத்தம் கேட்டு திடுக்கிட்ட மகன் திரிஷ் அவரை காப்பாற்ற முயன்றுள்ளான். இதில் அவனுடைய கைகளிலும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

வேகமாக விளக்கை போட்ட மற்றொரு மகன் குணால் தாய் ரத்த வெள்ளத்தில் இருப்பதை பார்த்து உடனடியாக உறவினர்களின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் மகாலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதற்கிடையில் மனைவியை கொலை செய்த கிருஷ்ணன் கத்தியுடன் பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.