வவுனியாவில் பேரூந்துக்குள் கேரள கஞ்சா மீட்பு!!

321

வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (14.10) காலை 5.45 மணியளவில் பேரூந்துக்குள்ளிருந்து கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் கஞ்சா கடத்துவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கிணங்க வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனையிட்ட சமயத்தில் பையினுள் பொதிசெய்யப்பட்டிருந்த 9 கிலோ கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும் சந்தேகநபர் எவரையும் பொலிஸார் இது வரை கைது செய்யவில்லை

கேரள கஞ்சாவினை பேரூந்தில் வைத்த நபர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.