வவுனியாவில் அடைமழை : மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

380


வவுனியாவில் இன்று பிற்பகல் 2 மணியிலிருந்து தொடர்ந்து அடை மழை பெய்து வருகின்றது. கடந்த சில நாட்களாக மழையுடனான கால நிலை நீடித்துள்ள நிலையில் இன்று பிற்பகல் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

தொடர்ந்து பெய்துவரும் மழையினால் பொது மக்களின் இயல்புவாழ்வு பாதிப்படைந்துள்ளது. தூர இடங்களிலிருந்து வவுனியாவிற்கு வந்தவர்கள் திரும்பிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அண்மைய காலங்களுடன் ஒப்பிடுகையில் இன்று அதிகளவான மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.



தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக கைவிடப்பட்ட வயல் நிலங்களில் வயல் செய்கைகளை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். குளங்கள் மழை வெள்ளத்தினால் நிறைந்துள்ளன. இன்று காலை பூம்புகார் பகுதியிலுள்ள குளத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது எனினும் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை. வெடிப்புக்குள்ளான குளத்தின் புனரமைப்பு இடம்பெற்றுள்ளது.