சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த மொடல் அழகியின் சடலம் : அதிர்ச்சி சம்பவம்!!

309


மும்பையில் மொடல் அழகியை கொலை செய்து சூட் கேசில் அடைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 19 வயது இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்தவர் மொடல் அழகி மான்ஸி தீக்ஸித் (20). இவர் மும்பையில் தங்கி மொடலிங் செய்து வருகிறார்.

சையத் முசம்மில் என்ற 19 வயது இளைஞர் நேற்று மதியம் மான்ஸிக்கு போன் செய்து தன்னுடைய பிளாட்டிற்கு வரவழைத்துள்ளார்.



அங்கு இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சையத் உடனடியாக கத்தி ஒன்றினை எடுத்து மான்ஸியை குத்தி கொலை செய்துள்ளார்.




இதனையடுத்து அவருடைய உடலை சூட்கேசில் அடைத்த அவர், ஏர்போட்டிற்கு செல்ல கார் ஒன்றினை ஆன்லைனில் புக் செய்துள்ளார். காரில் ஏறிய சையத் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்த சொல்லிவிட்டு காருக்கு பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.

பின்னர் தான் கையில் வைத்திருந்த சூட்கேஸை காட்டுக்குள் தூக்கி வீசிவிட்டு, ரிக்சாவில் ஏறி வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில் அதே வழியாக திரும்பிய கார் ஓட்டுநர், காட்டுக்குள் சூட்கேஸ் கிடப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்து போது உள்ளே ஒரு உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, ஆன்லைனில் கார் புக் செய்த முகவரியை கொண்டு குற்றவாளி சையத்தை கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பொலிஸார் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.