வவுனியா பள்ளிவாசலில் இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டு பூர்த்தி விஷேடவழிபாடு!!

296


வவுனியா நகரப்பள்ளிவாசலில் இன்று(16.10) காலை 10மணியளவில் இலங்கை இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டுப்பூர்த்தியை முன்னிட்டு விஷேட சமய வழிபாடு இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகர ஜூம்மாப்பள்ளியின் பிரதான மௌலவி அல் ஹபீர் அமீரின் ஆலோசனைக்கு அமைவாக நிர்வாக சபை மற்றும் பிரதேச முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புடனும் வன்னி எஸ்.எப்.கொமாண்டர் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா தலைமையில் ஜூம்மாப்பள்ளியில் விஷேட வழிபாடு இடம்பெற்றது.



இவ் விஷேட பிரார்த்தனையின்போது 59 இராணுவப்படையணியும் 5 பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை இராணுவத்தினரின் 69ஆவது ஆண்டுப் பூர்த்தியை முன்னிட்டு பாதுகாப்புப்படை தலைமையகம் வன்னிக்குட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப்படை தலைமையகம் வன்னி, கட்டளை தலைமையகம், இன்பே வடமத்திய படைப்பிரிவு தலைமையகம், மற்றும் படைகளின் கொடிகளுக்கும் நகரப்பள்ளிவாசலில் இடம்பெற்ற விஷேட வழிபாடுகளில் ஆசீர்வாமும் இடம்பெற்றது.