வவுனியாவில் தற்கொலைகளைத் தடுப்பது தொடர்பான கருத்தரங்கு!!

646


வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று (18.10) காலை 9.30 மணியளவில் வவுனியா பிரதேச செயலகம், இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபை இணைந்து ஏற்பாடு செய்த உலக உளநல தினத்தை முன்னிட்டு இலவச கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா பிரதேச செயாளர் கா.உதயராசா, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் பிரதான பிஷப் பி.என்.இராஜசிங்கம்,



வவுனியா வைத்தியசாலையின் உளநலப்பிரிவு வைத்தியர் யுராஜ், வவுனியா வைத்தியசாலையின் சிரேஷ்ட உளநலப்பிரிவு வைத்தியர் சுதாகரன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத்தலைர், வவுனியா நெடுங்கேணி பிரதேச சபைத்தலைவர், உறுப்பினர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியாவில் முதற்தடவையான ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகளின் அடிப்படையில் பாடசாலைகள், கிராமங்கள் என தொடர்ந்து இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.



உளநல வைத்தியர்களின் ஆலோசனைகள், சிறப்புக் கருத்தரங்கு இடம்பெற்றதுடன் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வுகள், ஆலோசனைகளும் வழங்கப்பட்டவுள்ளன.