வவுனியா பொது வைத்தியசாலை வளாகத்தில் மரம் நாட்டுவதற்கு வெளிநோயாளர் பிரிவு பொறுப்பு வைத்தியரிடம் வவுனியாவிலுள்ள வர்த்தகர் என். எஸ். ரட்ணம் அவர்களினால் மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.
மரநாட்டும் நிகழ்வை முன்னிட்டு பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள், வைத்தியசாலை போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு பொறுப்பு வைத்தியர் சுரேந்திரனினால் வைத்தியசாலை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.