வவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள்!!

411

வவுனியா கோவில்குளத்தில் சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வுகள் இன்று (21.10) கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

கோவில்குளம் கிராம உத்தியோகத்தரின் காரியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை உறுப்பினரும், வன்னி மாவட்டத்தின் புளொட் அமைப்பின் பொறுப்பாளருமான க.சந்திரகுலசிங்கம் கலந்துகொண்டிருந்தார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் சிறுவர்களின் கலைநிகழ்வுகளும் முதியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தது.

வவுனியா கோவில்குளத்தில் நூறு வயதையும் கடந்து வாழ்ந்து வரும் வயோதிபத் தாயராகிய சண்முகம் மீனாட்சி விசேடமாக கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.க.சந்திரிக்கா கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்கவி அவர்களினால் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பி.பத்மரஞ்சனின் சேவையை பாராட்டி அவருக்கான கௌரவிப்பு நிகழ்வும் றொக்கற் விழையாட்டு கழகத்தின் தலைவர் எஸ்.நிரோசனால் நடத்தப்பட்டது.

நிகழ்வில் நூறு வயோதிபர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் அதிதிகளாக கலந்து கொண்டவர்களினால் சிறுவர்களுக்கு மற்றும் முதியவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், சமுதாய பொலிஸ் பொறுப்பதிகாரி சி.எம்.அரவிந்த, கிரம உத்தியோகத்தர் எம்.செல்வராசா மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.