நாகப்பாம்பின் பின்புறத்தில் இருந்த காட்சி : வைரலான புகைப்படம்!!

474


காபி தோட்டத்தில் நாகபாம்பின் பின் பகுதியில் நெருப்பு போல் சிவப்பு வர்ணம் காட்சி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவின் கொப்பா தாலுகா ஹலேமக்கி கிராமத்தை சேர்ந்தவர் அவினாஷ். இவருக்கு சொந்தமான காபி தோட்டத்தில் நேற்று காலையில் நாய் குரைத்து கொண்டிருந்தது.

இதனால் அப்பகுதிக்கு சென்று அவினாஷ் பார்த்துபோது, நாகபாம்பு ஒன்று நாய் முன் படம் எடுத்தபடி நின்றது. மேலும் பாம்பின் பின்புறத்தில் நெருப்புபோல் சிவப்பு வர்ணம் தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவினாஷ் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.



இதுகுறித்து அவினாஷ் கூறும்போது,நாய் குரைப்பதை கேட்டு தோட்டத்திற்கு சென்றபோது பாம்பு ஒன்று படமெடுத்து நிற்பதையும், அதன் பின்புறத்தில் சிவப்பு வர்ணம் காட்சி அளிப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

இதை மற்றவர்களுக்கு காட்டுவதற்காக உடனடியாக செல்போனில் படம் பிடித்தேன். சில நிமிடங்களுக்கு பின்னர் அங்கிருந்த புதருக்குள் பாம்பு சென்றுவிட்டது.



இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து பாம்பை பிடிக்கும்படி கோரிக்கை விடுக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.