நடிகர் தனுஷ் எங்கள் மகன் என கூறிய தம்பதி : மீண்டும் செய்த செயல்!!

425

நடிகர் தனுஷை மகன் என உரிமைக் கோரிய மேலூர் தம்பதி தங்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பிரபல நடிகர் தனுஷ் தங்களின் மகன் என மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதி வழக்கு தொடர்ந்த நிலையில் அதை ரத்து செய்து கடந்த ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்த பிறப்பு சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகிய ஆவணங்கள் போலியானது என மதுரை புதூர் காவல் நிலையம் மற்றும் காவல்துறை ஆணையரிடம் கடந்தாண்டு கதிரேசன் புகார் அளித்தார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கதிரேசன் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.