3 வருடங்களாக உணவு சாப்பிடாமல் இருந்த மனிதர் : ஆச்சர்ய சம்பவம்!!

313


உணவுக்குழாயில் பல் சிக்கிக்கொண்டதால் இந்தியாவை சேர்ந்த ஒருவர் 3 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

மேற்கு வாங்க மாநிலத்தை சேர்ந்த 46 வயதான தீபக் நந்தி என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றினை வைத்து நடத்தி வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, 2 பற்கள் உணவுடன் சேர்த்து வயிற்றுக்குள் சென்றுவிட்டது.



இதனை அறிந்துகொண்ட தீபக், வெளியில் சொன்னால் அவமானம் எனக்கருதி வீட்டில் யாரிடமும் சொல்லமால் மறைத்துள்ளார். அந்த பற்கள் இரண்டும் உணவுக்குழாயில் அடைத்துக்கொண்டதால், தீபக் உணவு உண்ணமுடியாமல் தவித்துள்ளார்.

தன்னுடைய சகோதரன் மற்றும் தாய்க்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காக வீட்டில் அவர்கள் முன் உணவு அருந்துவதையே தவிர்த்துள்ளார். தனிமையில் மிகவும் சிரமப்பட்டு உணவு சாப்பிட்டு வந்துள்ளார்.



தீபக் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை புரிந்துகொண்ட அவருடைய சகோதரன் நடந்தவை பற்றி கேட்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில், வயிற்றில் சென்ற இரண்டு பற்கள் உணவுக்குழாய் முழுவதையும் சேதப்படுத்தியிருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.



இதனையடுத்து அவருக்கு இரண்டு முறை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது 3 வருடங்களுக்கு பின்னர் முதன்முறையாகா தீபக் மீண்டும் உணவு சாப்பிட்டுள்ளார்.