வவுனியாவில் வர்த்தகர்கள், ஊழியர்களின் பிள்ளைகள் கௌரவிப்பு!!

585

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் அனுசரணையில் வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பிள்ளைகள் மற்றும் வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களின் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் இவ்வருடம் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு வர்த்தகர் சங்கத்தலைவர் எஸ்.சுஜன் தலைமையில் வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டத்தின் மூத்த சட்டத்தரணியும் ஜனாதிபதி சட்டத்தரணியியுமான எம்.சிற்றம்பலம், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எம்.எஸ்.தென்னகோன், வவுனியா நகரசபைத் தவிசாளர் இ.கௌதமன், நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன், வவுனியா தெற்கு கல்வி வயலப்பணிப்பபாளர் முத்து இராதாகிருஷ்ணன், சட்டத்தரணி தயாபரன் மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்திப்பணிப்பாளர், கிராம அலுவலர் மற்றும் வர்த்தகப்பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் 72 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.