வவுனியா மாவட்ட செயலகத்தில் மாபெரும் தொழிற்சந்தை : ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்பு!!

959

வவுனியா மாவட்ட செயலகத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் அனுசரணையுடன் தொழிற்சந்தை நிகழ்வு இன்று (30.10.2018) காலை 8 மணி தொடக்கம் மதியம் 2 மணிவரை இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். ஹனீபா அவர்கள் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இம் மாபெரும் தொழிற்சந்தையில் பல்வேறு தொழில் வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பங்கு பற்றி தங்களுக்கு பொருத்தமான துறையில் நேர்முகத்தேர்வினையும் மேற்கொண்டனர்.