வவுனியாவில் கலைஞர்கள் கௌரவிப்பு!!

366


 

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன், வவுனியா மாவட்ட கலாசார பேரவையும், மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழாவில் கலைஞர்கள் ஊடகவியலாளர் என பலர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.



வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் எம்.ஐ.கனீபா கலைஞர்களுக்கான விருதுகளை வழங்கினார்.

வவுனியம் மூத்த கலைஞர் விருது மற்றும் வவுனியம் கலை இளவல் விருதுகள் வாத்தியம், இசை நாடகம், ஓவியம், ஊடகம், ஒளிப்படம், நடிப்பு, இலக்கியம் ஆகிய கலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



ஊடகத்துறையினூடாக கலை, இலக்கியத்திற்கு பணியாற்றியமைக்காக வவுனியா பிராந்திய ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் வசந்தரூபனுக்கு பிரதேச செயலாளர் க.உதயராஜாவினால் வவுனியம் கலை இளவல் என்ற விருது வழங்கப்பட்டது.