இன்றே இந்த 6 பழக்கங்களை நிறுத்தி கொள்ளுங்கள் : உயிருக்கே ஆபத்து வருமாம்!!

525

தற்போதைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகள் அவர்கள் தினமும் செய்யும் ஒரு சில செயல்களினால் தான் வருகின்றன என்பது அவர்களுக்கே தெரியாது. அந்த வரிசையில் நாம் இன்றே நிறுத்தி கொள்ள வேண்டிய ஒரு சில முக்கிய பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.

மாத்திரைகள் : இரவு நேரங்களில் தூக்கம் வரவில்லை என்பதற்கான கண்ட தூக்க மாத்திரைகளையெல்லாம் நாம் சாப்பிடுகின்றோம். இந்த பழக்கம் நமது உடலுக்கும் பக்க விளைவு ஏற்படுத்தி, அல்சர், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

நகம் கடிக்கும் பழக்கம் : ஒரு சிலருக்கும் எப்பொழுதும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இப்படி செய்வதால் அவர்களுக்கு வயிற்றில் கோளாறுகள், நகத்தில் தழும்புகள், பற்களில் பிரச்சினை போன்றவை ஏற்படும்.

ஜங்க் உணவுகள் : வீட்டில் சமைக்கும் உணவுளை உண்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். எனெனில் கடைகளில் விற்கப்படும் ஜங்க் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுக்குமே தவிர எந்த விதத்திலும் நமக்கு நன்மையை தராது.

புகை பிடித்தல் : புகை பிடித்தல் புற்றுநோய், இதய கோளாறுகள், நுரையீரல் பிரச்சினை போன்ற ஆயிர கணக்கான நோய்கள் வரும் என தெரிந்தும் நாம் பலரும் இதனை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

காலை உணவை தவிர்த்தால் : காலை உணவை தவிர்த்தால் கட்டாயம் உங்களுக்கு வருகின்ற பிரச்சினைகள் ஏராளம். மேலும் இதனால் உடல் பருமன், தொப்பை போடுதல், சோர்வு, மன அழுத்தம் ஆகியவை இதனால் ஏற்படும்.

பாத்ரூமில் மொபைல் பயன்படுத்துதல் : மொபைலை பாத்ரூமில் பயன்படுத்துவதால் பாத்ரூமில் உள்ள பாக்டீரியா, வைரஸ், E கோலி போன்ற நுண்ணுயிர்கள் நமது மொபைலில் ஒட்டி கொள்ளும். மேலும் இவற்றை நாம் பயன்படுத்துவதால் பல தொற்று நோய்கள், வயிற்று போக்கு, சுவாச பிரச்சினை போன்றவை ஏற்பட கூடும்.