தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் அர்ஜூன் மனு!!

462


கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறிய பாலியல் புகார் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி, நடிகர் அர்ஜூன் மனு அளித்துள்ளார்.



மீ டூ விவகாரம் திரைத்துறையில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீது கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகாரை மீ டூ ஹேஷ்டாக் மூலம் தெரிவித்தார்.

இந்த புகாரை மறுத்த அர்ஜூன், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளதாக கூறிய நிலையில், ஸ்ருதியிடம் மான நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் கேட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.



அதன் பின்னர், கடந்த 2015ஆம் ஆண்டு தனியார் சொகுசு விடுதியில் அர்ஜூன் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், தன் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் ஸ்ருதி ஹரிஹரன் பொலிசில் புகார் அளித்தார்.



இந்த புகாரின் அடிப்படையில் அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அர்ஜூன் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, அர்ஜூனின் வழக்கறிஞர் இந்த பாலியல் புகார் வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.