வவுனியா மாவட்ட முதியோர் தினவிழா!!

866

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய வவுனியா மாவட்ட முதியோர் தினவிழா இன்று (01.11) வவுனியாவில் இடம்பெற்றது.

வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புதிய பேருந்து நிலையத்தில் காலை பேருந்துகளில் முதியோர்களின் பயண வசதிக்காக ஆசனம் ஒதுக்குகின்ற நிகழ்வு இடம்பெற்றிருந்ததோடு அதனை அடுத்து முதியோர் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற தொனிப்பொருளில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகரசபை கலாசார மண்டபம் வரை ஊர்வலம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனிபா கலந்துகொண்டதோடு மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஷ்குமார், செட்டிக்குளம் பிரதேச செயலாளர் மற்றும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை வடமாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கைதடி முதியோர் இல்லத்தில் பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் ஊர்வலத்திலும் நிகழ்வுகளிலும் கலந்து கொண்டிருந்தனர்.