வவுனியாவில் நாளை நடைபெறவிருந்த தேசிய தீபாவளி திருநாள் நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது!!

475

நாளை 06.11.2018 தீபாவளி தினத்தன்று வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வளாகத்தில் வவுனியா மாவட்ட செயலகம் மற்றும் பாதுகாப்புப் படையின் அனுசரணையுடன் இடம்பெறவிருந்த கலை நிகழ்வுகள் மற்றும் மதிய போசனம் தவிர்க்க முடியாத காரணத்தால் நிறுத்தப்பட்டுள்ளது.

இச் செய்தியை வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளனர்.