வவுனியாவில் சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!!

512


வவுனியாவில் நேற்று காலை முதல் பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டம் பல மாதங்களாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு வேளைகளில் மழை பெய்து வருகின்றது.



இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தீபாவளி கொண்டாட்டங்களும் களை கட்டவில்லை என்றும், வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.