அமெரிக்காவில் பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு : ஏராளமானோர் படுகாயம்!!

336

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிசூட்டில் ஒருவர் பரிதாபமாக பலியாகியதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மதுபான விடுதியில், மர்ம நபர் இரவு 11.20 மணிக்கு (உள்ளுர் நேரப்படி) சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் 11 முதல் 20 பேர் காயமடைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் என்னுடைய தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது மதுபான விடுதியை நோக்கி வந்த ஒரு இளைஞர் தன்னுடைய கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு பாதுகாவல் அதிகாரியை சுட்டுக்கொன்றனர்.

அதன் பிறகு உள்ளே சென்ற அந்த இளைஞர், 30 முறை சரமாரியாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். மேலும் அவர் கையில் வைத்திருந்த புகை குண்டையும் உள்ளிருந்தவர்கள் மீது தூக்கி எறிந்தார் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தாக்குதல் நடத்திய இளைஞர் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அதற்கான முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.