ஓய்வுபெற்ற  ரங்கன ஹேரத் : தோளில் சுமந்து பிரியாவிடை கொடுத்த சகவீரர்கள்!!

475


இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நேற்றுடன் ஓய்வு பெற்றுள்ளார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் காலி மைதானத்தில் நடந்து வருகிறது.



கடைசி டெஸ்ட் போட்டியுடன் இலங்கை அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார்.

காலி நகரில் நடைபெற்றும் முதல் டெஸ்ட் போட்டியுடன் அவர், ஓய்வு பெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்தது.
அதன்படி, நேற்று காலி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற்றார் ரங்கனா ஹேரத்.



மைதானத்திற்கு, அவரது மனைவி மற்றம் பிள்ளைகளும் வந்திருந்தனர். ஹேரத்தை தங்களது தோளில் சுமந்து சென்று இலங்கை வீரர்கள் பிரியாவிடை கொடுத்தனர்.



40 வயதான ஹேரத் 1999ம் ஆண்டு காலி மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.


92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 430 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணியில் முரளிதரனுக்கு (800 விக்கெட்கள்) பிறகு அதிக விக்கெட்கள் வேட்டையாடியவர்களில் ஹேரத் 2வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.