புற்றுநோயால் பாதிக்கபட்டவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவி : கண்ணீர் விட்டு அழுத விவசாயி!!

660


புற்றுநோய் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி வரும் ‘நெல்’ ஜெயராமனின் மொத்த மருத்துவ செலவையும் நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டுள்ளார்.



விவசாயத்தில் பல புரட்சிகளை செய்த நெல் ஜெயராமன் என்பவரை புற்றுநோய் தாக்கியது. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நெல் ஜெயராமனை அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படக் கலைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சென்று பார்த்து வருவதோடு தங்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருகிறார்கள்.



“என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும்” என்றார் #நெல்_ஜெயராமன். தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் “நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை” என்றார். ஒரு விவசாயியை காக்க துடிக்கும் நல்ல மனசு கோயிலுக்கு சமம்!




இந்நிலையில் அப்பல்லோவில் அவரை சேர்த்து, மொத்த மருத்துவ செலவுகளையும் ஏற்றது நடிகர் சிவகார்த்திகேயன் என தற்போது தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நெல் ஜெயராமனை சந்தித்து அவருடன் பேசும் புகைப்படத்தை இயக்குனர் சரவணன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என்னை அப்பல்லோவில் சேர்த்து மொத்த செலவையும் ஏற்ற தம்பி சிவகார்த்திகேயனை நேர்ல பார்த்து நன்றி சொல்லனும் என்றார் நெல்_ஜெயராமன்.


தானாக ஓடிவந்த சிவகார்த்திகேயன் நன்றி சொல்லாதீங்கண்ணே, நலமாகி வாங்க அதுதான் தேவை என்றார் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த பதிலைக் கேட்டு கண்கலங்கி போய்விட்டாராம் நெல் ஜெயராமன். இதோடு ஜெயராமன் மகனின் முழு படிப்பு செலவையும் அவர் படிக்கும் காலம் முழுக்க ஏற்பதாகவும் சிவகார்த்திகேயன் சொல்லி இருப்பதாக சரவணன் தெரிவித்துள்ளார்.