மூக்கை அழகுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்ய விரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!

278


திருமணத்திற்குமுன் தனது மூக்கை அழகுபடுத்த வேண்டும் என விரும்பிய ஒரு அழகிய இளம்பெண் மூளைச் சாவு அடைந்த பரிதாப சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.



Dallasஐச் சேர்ந்த ரியல் எஸ்டேட் ஏஜண்ட் Laura Avila (36). தனது காதலரான Enrique Cruzஐ திருமணம் செய்ய முடிவு செய்த நிலையில், திருமணத்திற்குமுன் அறுவை சிகிச்சை செய்து தனது மூக்கை அழகுபடுத்த முடிவு செய்தார் Laura.



அமெரிக்காவில் அவருக்கு இன்சூரன்ஸ் இல்லாததால், மூக்கை அழகு படுத்தும் அறுவை சிகிச்சைக்கான 7,500 டொலர்களை கட்ட இயலாத நிலையில் Laura தனது காதலருடன் மெக்சிகோவில் உள்ள ஒரு ஒரு அழகியல் மருத்துவமனைக்கு சென்றார்.



மெக்சிகோவில் குறிப்பிட்ட சிகிச்சைக்கான கட்டணம் அமெரிக்காவை விட குறைவு. ஆனால் மெக்சிகோ சென்ற Lauraவுக்கு சற்றும் எதிர்பாராத ஒரு பயங்கரம் காத்திருந்தது.
அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டபோது, அது மயக்கம் ஏற்படுத்துவதற்கு பதிலாக, நேராக மூளையைச் சென்று தாக்கியது.


சிறிது நேரத்தில் அவருக்கு மாரடைப்பும் ஏற்பட, அவரது மூளைக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக அவரை ஒரு கோமா நிலைக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். நான்கு நாட்களுக்குப்பின், பில் கட்ட பணமின்றி தவித்து, போராடி, ஒருவழியாக Lauraவை அமெரிக்காவுக்கு கொண்டு வந்தனர்.


அவரை பரிசோதித்த அமெரிக்க மருத்துவர்கள், Laura ஏற்கனவே மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அபாயமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வதா இல்லையா என்பதை அவரது குடும்பத்தினர்தான் முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில் மெக்சிகோவிலுள்ள அழகியல் மருத்துவமனை மீது Lauraவின் குடும்பத்தினர் வழக்கு தொடர முடிவு செய்துளனர்.