வவுனியா நகரசபை உறுப்பினர் காண்டீபன் ஒழுங்கமைப்பில் “எமது கிராமங்களை நாமே கட்டியெழுப்புவோம்”!!

301

வவுனியா நகர சபையின் முதலாம் வட்டார உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினருமான ஆசிரியர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஒழுங்கமைப்பில் பத்தினியார் மகிழங்குள மயானத்தில் மழை காலங்களில் உடல்களை தகனம் செய்வதற்குரிய கட்டிட தொகுதி சமூக ஆர்வலர் திருமதி கனகையா இராசலட்சுமி பண உதவியுடன் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் பத்தினியார் மகிழங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சோதிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வவுனியா நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் கலந்து கொண்டதுடன், நிகழ்வில் திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் சந்திரேஸ்வரன் ரவி, தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ், மரண உதவிச் சங்கத்தின் பொருளாளர் சுரேஷ்குமார், திருநாவற்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர் புவி ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மயானத்தில் மழை காலங்களில் உடல்களை தகனம் செய்யும் கட்டிட தொகுதி அமைக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.