நாளை அவசரமாக கூடுகிறது நாடாளுமன்றம் : சபாநாயகரின் திடீர் அறிவிப்பு!!

280

நாடாளுமன்றம் இன்று காலை கூடியிருந்த நிலையில் பிரதமரின் உரைக்கு பின்னர் அமளி துமளி ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நாடாளுமன்றம் நாளையதினம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் நாளைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் கூடும் என குறித்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.