வடகிழக்கை தனி நாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் : கொந்தளிக்கும் மனோ!!

229


வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு என்ற மாநிலம் உருவாகியிருந்தால் அதனை தனி நாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து இன்றைய அமர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை காட்டமாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தென்னிலங்கையிலுள்ள கட்சிகள் மத்தியில் நல்லிணக்கம் இல்லை. 1984ஆம் வருடத்தில் வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டு வடகிழக்கு என்ற தமிழ் மாநிலமொன்று உருவாவதற்கான சூழல் உருவாகிய போது அதனை விடுதலைப் புலிகள் தடுத்து விட்டார்கள்.



அவர்களின் கொள்கைகளின் அடிப்படையிலே இந்திய படைகளுடன் சண்டையிட்டு எல்லாவற்றையும் இல்லாமலாக்கிவிட்டார்கள். அப்படி இருந்திருந்தால் இன்று வடகிழக்கை தனி நாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாம்.



இவர்களுடன் சேரந்து வாழ முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். அந்தளவிற்கு மோசமான நிலை நிலவுகின்றது என கூறியுள்ளார்.


 

-தமிழ்வின்-