தமிழகத்தின் பல இடங்களை புரட்டிப்போட்ட கஜா புயல்!!

355

கஜா புயல் எப்படி கரையை கடந்தது என்பதை காட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை கஜா புயல் புரட்டி போட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலானது இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே பயங்கர வேகத்தில் கரையை கடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.

ஒரு வீடியோவில் புயல் மிக அதிக வேகத்தில் சென்றது தெளிவாக தெரிகிறது. கஜா புயலின் கண் பகுதி சரியாக கரையை கடக்கும் சமயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் வேதாரண்யத்தில் கரையை கடந்த போது, இன்னொரு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. புயலின் வேகத்தில் மரங்கள் அங்கு சாய்ந்தது.

அடுத்த வீடியோவில் சரியாக 110 கிமீ வேகத்தில் வேதாரண்யம் அருகே கரையை கடந்த காட்சிகள் தத்ரூபமாக பதிவாகியுள்ளது.