வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையால் 60 காட்டாகாலி மாடுகள் பிடிக்கபட்டது!!

450

வவுனியா தெற்குதமிழ் பிரதே சபையால் அறுபது கட்டாகாலி மாடுகள் பிடிக்கபட்டுள்ளதாக சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம் தெரிவித்தார்.

வவுனியா தெற்குபிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள், மற்றும் வட்டார உறுப்பினர்களால் சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

அதற்கமைவாக கடந்த மாதம் நடைபெற்ற சபையின் அமர்வில் வீதிகளில் சுற்றித்திரியும் கட்டாகாலி மாடுகள் தொடர்பாக முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அதற்கமைவாக வீதிகளில் நிற்கும் கால்நடைகள் பிரதேசசபையால் பிடிக்கபட்டு சபையின் வளாகத்தில் அடைக்கபட்டுள்ளது. இன்றுவரை அறுபது மாடுகள் பிடிக்கபட்டுள்ளதாகவும் உரிமையாளர்கள் அதற்கான தண்டபணமாக பிடிகூலி, பராமரிப்பு செலவுகள் உட்பட்ட 1200 ரூபாயை செலுத்தி தமதுமாடுகளை மீட்டுசெல்ல முடியும் என தவிசாளர் தெரிவித்தார்.

மாடுகள் அடைக்கபட்டுள்ள ஒவ்வொரு நாளிற்காகவும் இருநூறு ரூபாய் பராமரிப்பு செலவிற்காக அறவிடப்படுவதுடன் பிடிக்கபட்டதிலிருந்து ஏழுநாட்களிற்கு பின்னர் அனைத்து மாடுகளும் ஏலத்தில் விடப்படும் என சபையின் தவிசாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.