மனைவியை பழிவாங்கிய கணவன் : இளம்பெண் மரணத்தின் பின்னணி!!

331

இந்திய தலைநகர் டெல்லியை உலுக்கிய இளம்பெண் கொலையில் அவரது கணவரும் காதலியின் பங்கும் குறித்து பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மாதம் 27 ஆம் திகதி ஹரியானா அருகில் உள்ள குருகிராமில் 8 வது மாடியில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக செய்தி வெளியானது. அன்று, வட இந்திய பெண்கள் கடைபிடிக்கும் ’கர்வா சாத்’ என்கிற பூஜை நாள். அதாவது கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க பெண்கள், விரதம் இருக்கும் நாள்.

விசாரணைக்கு வந்த பொலிசாரிடம், என் மனைவி தீபிகா, நான் நீண்ட ஆயுளுடன் இருக்க விரதம் இருந்தாள். ஆனால் திடீரென்று தற்கொலை செய்துகொண்டாள் என்றார் அந்தப் பெண்ணின் கணவர் விக்ரம்.

முதலில் நம்பிய பொலிசாருக்கு பிறகு வீட்டை சோதனை செய்த போது பல சந்தேகம் ஏற்பட்டது. ஏனென்றால் வீட்டில் பொருட்கள் அங்கும் இங்கும் அலங்கோலமாக சிதறி கிடந்தன. பின்னர் அவரது அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரித்ததில் அது தற்கொலை அல்ல, கொலை என்பது உறுதியானது.

பின்னர் விக்ரமை காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய முறையில் விசாரிக்க, வேறு வழியின்றி உண்மையை ஒப்புக்கொண்டார். குருகிராமில் அன்சால் வாலே வியூ சொசைட்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவருபவர் ஷெஃபாலி பாசின் திவாரி (35).

இவர் தனது கல்லூரி நண்பரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஷெஃபாலிக்கு இங்கு இரண்டு பிளாட்கள் இருந்தன. அதில் ஒன்றை விற்க முடிவு செய்தார். 2015 ஆம் ஆண்டு அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விக்ரம் சவுகான் என்பவரிடம் சொன்னார். அவர் விற்றுக் கொடுத்தார்.

இருவரும் ஒரே பிளாட் என்பதால் தினமும் காலையில் வாக்கிங் போகும்போது சந்தித்துக்கொண்டனர். இந்த நட்பின் காரணமாக, பேசிப் பழகினர். நாட்கள் செல்ல, இருவரும் காதல் வயப்பட்டனர்.

முதலில் பேச்சு, சிரிப்பு, மெசேஜ் என்று சென்று கொண்டிருந்த இவர்களின் நட்பு பின்னர் தகாத உறவு வரை வந்தது. விக்ரமுக்கு தீபிகா என்ற மனைவி, இரண்டு குழந்தைகள். தீபிகா வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி.

ஷெஃபாலி அடிக்கடி விக்ரம் வீட்டுக்கு வருவார். வீட்டில் எல்லோரிடமும் அன்பாக பழகுவார். இதை தவறாக நினைத்துக்கொள்ளவில்லை தீபிகா.

ஆனால், சில நாட்களில் தனது கணவரும் ஷெஃபாலியும் தவறான காதலில் இருப்பதை உணர்ந்து கொண்ட அவர், கணவரிடன் சண்டைப் போட்டுள்ளார். இது குடும்பத்துக்குள் பிரச்னையானது. இதற்கிடையே ஷெஃபாலியும் விக்ரமும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

அதற்கு முன்னதாக, இருவருக்கும் விவாகரத்து வேண்டும். ஷெஃபாலி, தனது கணவரிடம் விவாகரத்து பற்றி கேட்க, ஓகே சொல்லிவிட்டார் அவர். ஆனால், தீபிகா ஒப்புக்கொள்ள வில்லை. இதனால் ஷெஃபாலி ஏமாற்றமடைந்தார். இதையடுத்து ஷெஃபாலியும் விக்ரமும் லே-லடாக்கிற்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு, தீபிகாவை தீர்த்து கட்டிவிட்டு தற்கொலை என்று நாடகமாடி விடுவோம் என்றார். அதற்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுத்தார், ஷெஃபாலி.

அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளை கடந்த மாதம் 24 ஆம் திகதி நானிடாலுக்கு பிக்னிக் அழைத்துச் சென்றார் விக்ரம். அங்கு உயரமான பாறைக்கு அழைத்துச் சென்று தீபிகாவை கீழே தள்ளிவிடுவதுதான் திட்டம். ஆனால், இந்த திட்டத்தைப் புரிந்து கொண்டாரோ என்னவோ, ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரமாட்டேன் என்று இருந்துவிட்டார் தீபிகா கடந்த 27 ஆம் திகதி பால்கனியில் இருந்து தீபிகாவை தள்ளி விட முயற்சி செய்தார் விக்ரம்.

இதைப் புரிந்து கொண்ட அவர், தனது குழந்தை களுக்காகத் தான் வாழ வேண்டும், என்னை கொன்றுவிடாதே என்று கதறியிருக்கிறார். ஆனால், இந்த கதறலை, விக்ரமின் தகாத உறவு மறைத்துவிட்டது. பால்கனியில் இருந்து பலவந்தமாக அவரைத் தள்ளிவிட்டார். அலறிபடியே கீழே விழுந்து உயிர் விட்டார் தீபிகா. இதை அக்கம் பக்கத்து வீட்டினர் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த போது விக்ரமின் குழந்தைகள் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் ஷெஃபாலிக்கு தகவல் தெரிவித்துவிட்டு பொலிசில் புகார் செய்திருக்கிறார்.

பொலிசார், விக்ரம், ஷெஃபாலியின் மொபைல் மெசேஜ், இமெயில் உள்ளிட்டவற்றை சோதனை செய்து பார்த்ததில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இதையடுத்து முதலில் விக்ரமை கைது செய்த பொலிசார், ஷெஃபாலியை நேற்று கைது செய்துள்ளனர். அவர், விக்ரமின் 6 மாத குழந்தையை வயிற்றில் சுமந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.