மைத்திரி விடாப்பிடி : தொடர்ந்தும் மஹிந்தவே பிரதமர் : அதிரடி அறிவிப்பு!!

301

ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று பெரும்பான்மையை நிரூபித்த விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய முன்னணிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் காணப்பட்ட குழப்பமான நிலைமையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களை கையாளாது, நிலையியல் கட்டளைச் சட்டத்தை மீறி செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதனால், பிரதமராக தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவை அங்கீகரிப்பதாக ஜனாதிபதி, ஐக்கிய தேசிய முன்னணிக்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவின்றி தொடரும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.