மீண்டும் பிரதமராகின்றார் ரணில்?

257


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமாக நியமிக்கப்படவுள்ளதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.



நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையில் 23வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க அதிரடியாக நீக்கப்பட்டு, அந்த பதவிக்கு மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.



இதனால் கொழும்பு அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழப்பங்கள் தற்போது வரையில் நீடித்துள்ள நிலையில், அதற்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு தரப்புகளும் நடவடிக்கைகள் எடுத்துள்ளன.



அந்த வகையில், தற்போது அலரி மாளிகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.


இவ்வாறான நிலையிலேயே, நாளை அல்லது நாளை மறுதினம் இலங்கையில் 23வது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளதாக அலரி மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.