யாழில் திடீரென உள்வாங்கப்பட்ட கடல்நீர் : பெரும் அச்சத்தில் மக்கள்!!

257

யாழ் குடாநாட்டின் கடற்பரப்பில் ஐந்து அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கப்பட்டுள்ளமையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கஜ சூறாவளியின் தாக்கம் காரணமாக நெடுந்தீவு கடலில் நீர் மட்டம் 5 அடி குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக தீவுகளுக்கு இடையிலான படகு சேவை முழுமையாக நிறுப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை பயணிகள் படகுகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 5 அடி தூரத்திற்கு கடல்நீர் உள்வாங்கப்பட்டுள்ளது.

பின்னர் ட்ரக்டர் பயன்படுத்தி படகுகளை மேலே இழுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மற்றும் குறிக்கட்டுவான் தீவுக்கு இடையில் படகு சேவை நேற்று முழுவதும் தடைப்பட்டுள்ளது.

கடல் நீர் குறைவடைந்தமையினால் நெடுந்தீவு உட்பட தீவுகளின் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதேநேரம் நெடுந்தீவு கடற்பகுதியில் மணிக்கு 100 – 150 கிலோ மீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசியதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த தினங்களாக பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கஜ சூறாவளியின் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.